
கர்நாடக மாநிலத்தில் உள்ள கதக் டவுன் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருபவர் துருவ ராஜீ. அவரது வீட்டில் வருமானத்திற்கு அதிகமான சொத்துக்களை சேர்த்துள்ளதாக லோக் அயுக்தா உயர் அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது.
அந்தத் தகவலின் பேரில் நேற்று அவரது வீட்டில் லோக் அயுக்தா காவல் துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது லோக் அயுக்தா அதிகாரிகளிடம் சோதனையை நிறுத்தும்படி துருவராஜீ வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் மேலும் செல்போனில் சில உயர் அதிகாரிகளிடம், அரசியல் பிரமுகர்களிடம் பேசியதாகவும் கூறப்படுகிறது.
பின்னர் துருவராஜீ கழிவறைக்கு சென்று செல்போனில் பேசுவதை லோக் ஆயுக்தா அதிகாரிகள் ஒட்டு கேட்டதாக கூறப்படுகிறது. அதனால் துருவராஜீயால் நிம்மதியாக கழிவறைக்கு கூட செல்ல முடியவில்லை என கூறியுள்ளார்.
அவர் கழிவறையை விட்டு வெளியே வந்த போது லோக்அயுக்தா அதிகாரிகள் கணக்கில் வராத நகைகள், ரொக்கப் பணம், சொத்து ஆவணங்களை கைப்பற்றினர்.
இதனால் அதிர்ச்சியில் உறைந்த துருவராஜீ அப்படியே ஒரே இடத்தில் அமர்ந்ததாக கூறப்படுகிறது. இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.