U19 மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் கோப்பையில் இந்திய அணி வெற்றி பெற்று சாதனை படைத்தது. இந்நிலையில் வெற்றி பெற்ற இந்திய அணிக்கு மிகப்பெரிய பரிசு ஒன்றை பிசிசிஐ அறிவித்துள்ளது. இது தொடர்பாக பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா கூறுகையில், வெற்றி பெற்ற அணிக்கு ஐந்து கோடி ரூபாய் பரிசு வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். மேலும் இந்த சாதனை நாம் அனைவருக்கும் பெருமை வாய்ந்த தருணமாக அமைகின்றது. இந்தியாவில் மகளிர் கிரிக்கெட்டை நாம் அனைவரும் ஆதரிக்க வேண்டுவதற்கு வலு சேர்க்கின்றது என அவர் தெரிவித்துள்ளார்.