
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டி வட்டார போக்குவரத்து அதிகாரி நெடுஞ்செழிய பாண்டியன் தலைமையில் அலுவலர்கள் நேற்று தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சொந்த உபயோகத்திற்கு பயன்படுத்திய கூடிய வேனில் தகுதி சான்றிதழ், அனுமதிச்சீட்டு இல்லாமல் பள்ளி மாணவர்களை ஏற்றி சென்றது தெரியவந்தது.
இதனால் குழந்தைகளை அவரவர் வீடுகளில் இறக்கி விட்ட பிறகு அலுவலர்கள் அந்த வேனை பறிமுதல் செய்தனர். இதே போல தகுதி சான்றிதழ் இல்லாமல் இயக்கப்பட்ட டிப்பர் லாரியும் பறிமுதல் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து 2 வாகனங்களுக்கும் தலா 15,000 வீதம் 30,000 ரூபாய் அதிகாரிகள் அபராதம் வசூலித்தனர். இதுபோன்று மீண்டும் நடந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்