தமிழகத்தில் சட்டவிரோதமான முறையில் செயல்படும் மதுபான கடைகளை மூட வேண்டும் என புதிய தமிழகம் கட்சியின் கிருஷ்ணசாமி கோரிக்கை விடுத்துள்ளார். அவர் தமிழ்நாட்டில் சட்டவிரோதமான முறையில் செயல்படும் பார்களை மூட வலியுறுத்தி இன்று ஆளுநர் மாளிகை நோக்கி மாபெரும் பேரணி நடத்த இருப்பதாக அறிவித்துள்ளார்.

சட்டவிரோதமான மதுபான கடைகளில் மூலம் வசூலாகும் கோடிக்கணக்கான பணம் அதிகார மிக்கவர்களின் கஜானாவை நிரப்புகிறது என்று கிருஷ்ணசாமி குற்றம் சாட்டியுள்ளார். மேலும் இன்று சென்னை பனகல் மாளிகையில் இருந்து ஆளுநர் மாளிகை வரை பேரணியாக நடந்து சென்று ஆளுநர் ரவியிடம் சட்டவிரோதமான மதுபான கடைகளை மூட வலியுறுத்தி மனு கொடுக்க இருப்பதாகவும் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.