தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி சார்பாக நடத்தப்படும் போட்டி தேர்வுக்கான முடிவுகள் வெளியிடப்படும் உத்தேச தேதி விவரம் ஒவ்வொரு மாதமும் வெளியிடப்படுவது வழக்கம். அதன்படி ஜனவரி மாதம் உத்தேச அட்டவணையை www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் டிஎன்பிஎஸ்சி நேற்று வெளியிட்டுள்ளது. மொத்தம் 15 போட்டி தேர்வுகளில் முடிவுகள் வெளியிடும் உத்தேச தேதி அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குரூப் 2 மற்றும் குரூப் 2a பதவிகளில் 5,446 இடங்களுக்கு போட்டி தேர்வின் மூலம் முதல் நிலை தகுதி தேர்வு முடிவடைந்த நிலையில் பிப்ரவரி 25ஆம் தேதி முதன்மை தேர்வு நடத்தப்பட உள்ளது. குரூப் 4 பதவிகளில் 9840 இடங்களை நிரப்புவதற்கான தேர்வு முடிவுகள் பிப்ரவரி மாதம் வெளியாகும். மேலும் அனைத்து தேர்வுகள் குறித்த விவரங்களையும் மேற்கண்ட இணையதளத்தில் தேர்வர்கள் தெரிந்து கொள்ளலாம்.