தமிழகத்தில் அரசு சார்ந்த நிறுவனங்களில் Mass Interviewer / Social Case Worker  ஆகிய பணியிடங்களுக்கு என ஒதுக்கப்பட்டுள்ள காலி பணியிடங்கள் குறித்து அறிவிப்பு கடந்த செப்டம்பர் மாதம் வெளியிடப்பட்டது. அதன் பிறகு இந்த பணிகளுக்கான எழுத்து தேர்வு டிசம்பர் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் திட்டமிட்டபடி நடத்தப்பட்ட நிலையில் தற்போது இந்த தேர்வுக்கான தற்காலிக விடை குறிப்பு https://www.tnpsc.gov.in/ என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதனை தேர்வர்கள் டிசம்பர் 26 ஆம் தேதி வரை பெற்றுக் கொள்ளலாம் எனவும் விடை குறிப்பில் ஏதாவது ஆட்சேபனை இருந்தால் அதனை இணையதளம் மூலமாக தெரிவிக்க டிசம்பர் 26 ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதனைப் போலவே தமிழக வனத்துறையில் காலியாக உள்ள forest apprentice பணிக்கு நடைபெற்ற physical test மூலம் 1:4 என்ற விகிதத்தில் தேர்வு செய்யப்பட்ட நபர்களின் பட்டியல் அக்டோபர் 13ஆம் தேதி வெளியிடப்பட்ட நிலையில் தேர்வு செய்யப்பட்ட நபர்களுக்கு டிசம்பர் 29ஆம் தேதி நேர்முகத் தேர்வு நடைபெற உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தேர்வு செய்யப்பட்ட நபர்களின் பட்டியல் https://www.tnpsc.gov.in/ என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.