சமூக ஊடகங்களில் சமீபத்தில் வெளியான வீடியோ ஒன்று, லூயிஸ் விட்டன் பாணியிலான ஒரு கஃபேயில் பாதுகாவலர்களால் ஒரு இளைஞர் கையால் ஊட்டப்படுவதைக் காட்டி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த இளைஞர், ‘சீனாவின் மிகவும் பணக்காரரின் மகன்’ என்று வதந்தி பரப்பப்படும் மர்மமான சமூக ஊடகப் பிரபலம் ஜெய மா என்று நெட்டிசன்கள் மத்தியில் பரபரப்பான பேச்சு அடிபடுகிறது. தனது (@the.internationalkid) இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மறுபதிவு செய்யப்பட்டதாகக் கூறப்படும் இந்தக் காணொளியில், பிராண்டட் மேஜையில் அமர்ந்திருக்கும் ஜெய மா-வுக்கு, ஒரு பாதுகாவலர் ஸ்பூனால் உணவூட்டுவது பதிவாகியுள்ளது.
View this post on Instagram
இந்த வித்தியாசமான செயல் மற்றும் ஆடம்பரமான பின்னணி ஆகியவை பார்வையாளர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இந்த வீடியோ விரைவாகப் பல மில்லியன் பார்வைகளைப் பெற்றதுடன், ஜெய மா-வின் கோடீஸ்வர வாரிசு குறித்த வதந்தியை மேலும் வலுப்படுத்தியுள்ளது. ஜெய மா, தான் ‘சீனாவின் பணக்காரரின் மகன்’ என்று கூறி அடிக்கடி அதி ஆடம்பரமான இடங்கள், பிராண்டட் கஃபேக்கள், விலையுயர்ந்த ஹோட்டல்கள், மற்றும் பயண வீடியோக்களைப் பதிவிடுவதன் மூலம் இந்த வதந்தி உருவானதாகக் கூறப்படுகிறது.
இதற்கு முன்னர், கடந்த அக்டோபரில், ஜெய மா-வைச் சமையல்காரர் ஒருவர் கேவியர் ஊட்ட, பணியாளர்கள் பணக்கட்டுகளைக் கொண்டு வாயைத் துடைப்பது போன்ற வீடியோவும் வைரலானது. எனினும், இந்தக் கூற்றுக்கு இதுவரை எந்த உறுதியான ஆதாரமோ அல்லது அதிகாரப்பூர்வமான உறுதிப்படுத்தலோ இல்லை. தற்போது 4.8 லட்சத்திற்கும் அதிகமான பின்தொடர்பவர்களைக் கொண்ட ஜெய மா இன்ஸ்டாகிராம் மற்றும் டிக்டாக்கில் வளர்ந்து வரும் ஒரு உள்ளடக்கத்தை உருவாக்கும் கலைஞராவார்.
அவரது சுயவிவரத்தில், “வெளிநாட்டு மாணவர் இறுதித் தலைவர்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அவரது தனிப்பட்ட பின்னணி பற்றி எந்தத் தகவலும் பொதுவில் அறியப்படாத நிலையில், பரவும் வதந்திகளின் காரணமாகவே, ஜெய மா சமூக ஊடகங்களில் ஒரு மிகவும் சுவாரஸ்யமான மர்ம நபராக மாறியுள்ளார்.
