
இந்தியாவின் கடற்கரைகள் பல வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து வருகின்றன. இருப்பினும், இந்தியாவில் உள்ள கடற்கரைகளில் பெரும்பாலானவர்கள் முழு உடையுடன் கடலில் குளிப்பதைப் பார்க்கும் போது, சில வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் ஆச்சரியத்தில் ஆழ்கின்றனர்.
அதுபோல, சமீபத்தில் இந்தியாவுக்கு வந்த ஒரு வெளிநாட்டு பயணி, கடற்கரையில் யாரும் மேல் உடை இல்லாமல் இருக்கவில்லை எனக் கூறி தனது அனுபவத்தை இன்ஸ்டாகிராம் வீடியோவாக பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர், “இந்திய கடற்கரைக்கு முதன்முறையாக வந்துள்ளேன். யாரும் மேலாடை இல்லாமலே குளிக்கவில்லை. அனைவரும் முழு உடையுடன் இருக்கிறார்கள். இது எனக்கே புரியவில்லை. சிலரை தவிர யாரும் மேல்துணி இல்லாமல் இருக்கவில்லை. ஆனால் எனக்குப் பின் தெரிந்தது, இது இந்திய கலாச்சாரத்தின் ஒரு பகுதி” என தெரிவித்தார்.
View this post on Instagram
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வர, சிலர் அந்த பயணியை விமர்சித்தாலும், பெரும்பாலான நெட்டிசன்கள் இந்திய கலாச்சாரம் குறித்து விளக்கமளித்தனர். “இந்தியர்கள் பொதுவாக அடக்கம் மிக்க உடைகள் அணிவது வழக்கம். நாங்கள் உடலை அதிகம் காட்ட விரும்பவில்லை. இது நம் மரபு” என ஒருவர் கருத்து தெரிவித்தார்.
இந்தியாவில் சூரிய ஒளி போதுமான அளவில் இருக்கிறது. எனவே நமக்குத் தோலை வெளியில் காட்ட தேவையில்லை” என மற்றொரு பயணி குறிப்பிட்டுள்ளார். மேலும் அந்த வெளிநாட்டு பயணி கடலில் இறங்கும்போது, தனது பையில் உள்ள பொருட்கள் பாதுகாப்பாக இருக்குமா எனக் கவலைப்பட்டதாகவும், இந்தியர்களிடம் நம்பிக்கை வைத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் இந்திய கலாச்சார மரபுகள் மற்றும் வெளிநாட்டு பார்வைகள் இடையேயான வித்தியாசங்களை எடுத்துக்காட்டும் விதமாக சமூக வலைதளங்களில் விவாதிக்கப்படுகிறது.