சமூக வலைதளங்களில் பெண் ஒருவர் வித்தியாசமான முறையில் ரயில் நிலையத்தில் உள்ள தண்ணீர் குழாயில் தண்ணீர் பருகிய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் ஒரு ரயில் நிலையத்தில் பெண் ஒருவர் தண்ணீர் குழாயை அழுத்திவிட்டு தண்ணீரை குடிக்க தொடங்க முயற்சிக்கிறார். ஆனால் அதற்குள் தண்ணீர் நின்று விடுகிறது.

பொறுமையை இழந்த பெண் தனது தலையை வைத்து குழாயை அழுத்திப் பிடித்துக் கொண்டு வாயால் தண்ணீரை அருந்துகிறார். இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

அந்த வீடியோ ஒரு சிரிப்பூட்டும் காட்சியாக இருந்தாலும், ரயில் நிலையங்களில் பொதுமக்கள் பயன்படுத்தும் தண்ணீர் குழாய்களின் தரங்களை மேம்படுத்த வேண்டுமென்பதை அந்த வீடியோ எடுத்துக்காட்டி உள்ளது. மேலும் அந்த வீடியோ குறித்து நெட்டிஷன்கள் பலரும் வேடிக்கையான பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.