ஜம்மு- காஷ்மீரில் அனந்தராக் மாவட்டம் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மூலம் பதிலடி தாக்குதலை நடத்தியது.

அதன் பிறகு புதுடெல்லியில் மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்ததாவது, பஹல்காம் தாக்குதலில் அப்பாவி மக்களை கொன்றவர்கள் அழிக்கப்பட்டுள்ளனர். இந்திய ராணுவம் பயங்கரவாதிகளுக்கு சரியான பதிலடி கொடுத்துள்ளது.

இவை அனைத்தும் பிரதமர் மோடியால் தான் சாத்தியம். ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையால் பொதுமக்களுக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாமல் பயங்கரவாதிகளின் இருப்பிடங்களை மட்டுமே தாக்கியுள்ளோம்.

ஆப்ரேஷன் சிந்தூரில் இந்திய ராணுவத்தின் துல்லியமான இலக்கு எட்டப்பட்டுள்ளது. இதன் மூலம் பயங்கரவாதிகளின் இருப்பிடங்கள் திட்டமிட்டபடி அளிக்கப்பட்டுள்ளன.

இந்த தாக்குதல் மூலம் இந்திய ராணுவம் மிகப்பெரிய வரலாற்று சாதனை படைத்து உள்ளது.  மேலும் இந்த தாக்குதல் நடவடிக்கை இந்திய ராணுவத்தின் மகத்தான தைரியத்தை  உலகெங்கிலும் வெளிப்படுத்தியுள்ளது. இந்திய முப்படைகள் துல்லிய தாக்குதல் மூலம் இந்தியாவின் உரிமையை நிலைநாட்டி உள்ளது இவ்வாறு செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.