திருப்பூர் மாவட்டத்திலுள்ள உடுமலைப்பேட்டை அருகே பாலப்பம்பட்டி உள்ளது. இங்கிருந்து   கார் ஒன்று பழனியில் இருந்து கேரளா நோக்கி சென்று கொண்டிருந்தது.

அப்போது அங்கிருந்த வேகத்தடை மீது கார் வேகமாக ஏறி இறங்கியதில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் கவிழ்ந்து அருகே இருந்த பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்தவர்கள் மீது மோதியது.

இதில் மோகன்ராஜ் மற்றும் ராஜகோபால், ரங்கசாமி ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.  படுகாயம் அடைந்தவர்களை அருகில் இருந்தவர்கள் உடுமலை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

ஆனால் அங்கு அவர்கள் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.