திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தன் குடும்பத்தினருடன் டைரக்டர் ஷங்கர் சுவாமி தரிசனம் செய்துள்ளார்.

தமிழ் திரையுலகின் பிரபல டைரக்டரான ஷங்கர், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தன் குடும்பத்தினர் உடன் சுவாமி தரிசனம் செய்தார். அப்போது அவரது மகளும், நடிகையுமான அதிதி ஷங்கரும் உடன் சென்றிருந்தார்.

அங்கு அவர்களுக்கு திருப்பதி தேவஸ்தானம் சார்பாக சிறப்பு உபச்சாரம் அளிக்கப்பட்டது. தரிசனம் முடித்து வெளியில் வந்த ஷங்கருடன் ரசிகர்கள் போட்டி போட்டு செல்பி புகைப்படங்கள் எடுத்துக்கொண்டனர். இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது.