தமிழில் தாம் தூம் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை கங்கனா ரனாவத். இதையடுத்து தலைவி படத்தில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான இவர் இந்தியில் முன்னணி நடிகையாக உள்ளார். சமீபத்தில் தன் தாயார் விவசாய நிலத்தில் வேலை பார்க்கும் புகைப்படத்தை கங்கனா சமூகவலைத்தளத்தில் பகிர்ந்தார். அதனை பார்த்த ரசிகர்கள் பல கோடிகளுக்கு அதிபதியான பிறகும் கங்கனாவின் தாயார் விவசாய நிலத்தில் வேலை பார்க்கிறார். மிகவும் எளிமையானவர் என பதிவிட்டனர். இதற்கு கங்கனா பதிலளித்ததாவது “என் சம்பாத்தியத்தினால் எனது தாயார் செல்வந்தராகவில்லை.

என்னுடைய குடும்பத்தில் அரசியல் தலைவர்கள், உயரதிகாரிகள், தொழிலதிபர்கள் பலர் இருக்கின்றனர். என் அம்மா 25 வருடங்களுக்கும் மேல்  டீச்சராக பணியாற்றியவர். சினிமா மாபியா மீது நான் இந்த அளவுக்கு ரியாக்ட் ஆகும் விதத்திற்கு காரணம் என் அம்மா தான். இதன் காரணமாகதான் சில நடிகர்களை போல் நான் திருமணங்களில் தரத்தை குறைந்து டான்ஸ் ஆடமாட்டேன்” என்று கூறினார். அண்மையில் டெல்லியில் நடந்த ஒரு திருமண விழாவில் இந்தி நடிகர்கள் சல்மான்கான், அக்ஷய்குமார் இணைந்து மேடையில் நடனம் ஆடினார்கள். இது சம்பந்தப்பட்ட வீடியோ வைரலாகியது. ஆகவே இதனை மனதில் வைத்துகொண்டு தான் கங்கனா அவர்களை விமர்சித்து இவ்வாறு கூறி உள்ளதாக பலர் பேசி வருகின்றனர்.