
அரியலூர் மாவட்டம் கரடிகுளம் கிராமத்தில் அப்பாதுரை என்பவர் வசித்து வருகிறார் இவருக்கு ஷோபனா என்ற மகள் இருந்துள்ளார். இவர் வீட்டில் விளக்கு ஏற்றிக் கொண்டிருக்கும் போது திடீரென்று நெருப்பு சேலையில் பிடித்தது. அந்த தீ மளமளவென உடல் முழுவதும் பரவிய நிலையில் ஷோபனா வலியில் அலரி துடித்தார்.
உடனடியாக அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இவரை மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூருக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி சோபனா பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.