தூத்துக்குடி கோமஸ்புரத்தில் கருப்பசாமி (54) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தூத்துக்குடி நகர கட்டுப்பாட்டு அறையில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு குடும்ப பிரச்சனை இருந்துள்ளது. இந்நிலையில் மருத்துவ விடுப்பில் இருந்த இவர் மே 22ஆம் தேதி அன்று வீட்டில் விஷம் குடித்து மயங்கி விழுந்து உள்ளார்.

அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனத்தில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டது. இருப்பினும் அவர் கடந்த மே 29ஆம் தேதி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.