கொரோனா தொற்று பரவல் உலக நாடுகளை மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்டி படைத்து வருகிறது. இந்நிலையில் மராட்டியத்தின் அகோலா நகரில் ஆன்மீக குரு ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் கூறியதாவது, கொரோனா வைரசுக்கு எதிராக ஒட்டுமொத்த உலகமும் போராடி வருகிறது. அந்த சமயத்தில் இந்த நோயானது இயற்கையானது அல்ல என நான் கூறினேன். சில நாடுகள் மற்றும் மக்களின் சதி திட்டம் அது. உயிரியல் சார்ந்த போர் என நான் தெரிவித்தேன். ஆனால் என்னுடைய சீடர்கள் கூட இதனை வெளியே கூறி விடாதீர்கள். அது பெரிய சர்ச்சையை ஏற்படுத்திவிடும் என எனக்கு அறிவுறுத்தினர்.

ஆனால் தற்போது அந்த விஷயங்கள் அனைத்தும் நிரூபனமாகியுள்ளது. அதாவது கொரோனா தடுப்பூசிகளை  உற்பத்தி செய்யும் நாடுகள் அவை இருக்க வேண்டிய திறனுடன் இல்லை எனக் கூறி வருகிறது. மேலும் கொரோனா பரவலை நிறுத்தவில்லை எனவும் கூறுகின்றனர். கொரோனா குறித்த அதிக தகவல் எதனையும் நாங்கள் பெறவில்லை என அவர்கள் கூறி வருகின்றனர். மூலிகை மற்றும் ஆயுர்வேத மருந்துகளை பயன்படுத்த வேண்டும் என நான் உணர்ந்தேன்.

இதற்காக என் ஏ.ஐ.ஓ.கியூ 19 உற்பத்தி செய்யப்பட்டு 14 மருத்துவமனைகளில் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இந்த என் ஏ.ஐ.ஓ.கியூ 19 கொரோனா வைரஸ் குணப்படுத்தும் மருத்துவத்தில் பயன்பட்டு வருகிறது. இந்த மருந்தினை வெளிநாடுகளில் உள்ள பல பெரிய பல்கலைக்கழகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறது. என் ஏ.ஐ.ஓ.கியூ 19 மருந்து கொரோனா வைரஸ் தடுத்து நிறுத்துவதில் வெற்றி பெறும் என மக்களும் உணர்ந்தனர். செல்லுலார் சோதனையிலும் அது நிரூபணம் ஆகி உள்ளது. அதனால் நமது நாட்டின் யோகா மற்றும் ஆயுர்வேதம் மீது நாம் நம்பிக்கை வைக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.