
சென்னை ஏழுகிணறு என்ற பகுதியில் ஜெகதீஷ் என்பவர் தனது குடும்பத்தினருடன் தங்கி வேலை பார்த்து வருகிறார். இவர் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர். இவருக்கு ரோஹித் என்ற மகன் இருக்கிறார். இந்நிலையில் திடீரென ரோஹித் தன்னுடைய தந்தை ஜெகதீஷை இரும்பு ராடால் அடித்து கொடூரமான முறையில் கொலை செய்துள்ளார். இது தொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
இதைத்தொடர்ந்து ஜெகதீஷ் சடலத்தை மீட்டு அவர்கள் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் ரோஹித்தை கைது செய்தனர். அதன் பின் அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் தன் தந்தையை கொலை செய்து வீடியோவாக பதிவு செய்து மாமாவிற்கு அனுப்பி வைத்ததாக கூறினார். அதோடு தன்னுடைய தாயை கொடுமைப்படுத்தியதால் தான் தந்தையை கொலை செய்ததாக கூறியுள்ளார். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.