பிலிப்பைன்ஸ் நாட்டில் தற்போது வெயிலின் தாக்கம் கடுமையாக உள்ளது. அந்நாட்டின் பல பகுதிகளில் வெயில் இயல்புக்கு மேல் அதிகமாக இருப்பதால் அங்குள்ள பள்ளிகள் மாணவர்களின் உடல்நலத்தை கவனத்தில் கொண்டு மூடப்பட்டுள்ளன.

இதனால் அங்குள்ள மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து அந்நாட்டு அரசாங்கம் பொது மக்களிடம் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் அவசியமில்லாமல் பகல் நேரத்தில் வெளியே வர வேண்டாம் என கூறியுள்ளது.