இந்தியா-வங்காளதேச எல்லையில் பிஎஸ்எஃப் (BSF) வீரர் ஒருவர் எடுத்த தைரியமான நடவடிக்கை தற்போது சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது. வைரலாகும் 34 வினாடிகள் கொண்ட அந்த வீடியோவில், ஒருவரை வீடியோ எடுக்காதே என்று எச்சரித்த பிஎஸ்எஃப் ஜவான், அந்த எச்சரிக்கையை புறக்கணித்ததால், பயமுறுத்தும் வகையில் தனது துப்பாக்கியால் ஒரு ரவையை சுடுகிறார். இந்த வீடியோ 9 லட்சத்துக்கும் மேற்பட்ட பார்வைகளை பெற்றுள்ளது.

சம்பவம் திரிபுரா எல்லை பகுதியில் நடந்ததாக தெரிவிக்கப்படுகிறது. ஒரு பக்கம் உள்ளவர், எல்லைக்குள்ளே பிஎஸ்எஃப் வீரரை வீடியோ எடுக்க முயற்சிக்கிறார். வீரர் “நண்பா அப்படிச் செய்யாதீங்க”  என எச்சரிக்கையளிக்கிறார்.

ஆனால், அந்த நபர் வீடியோ எடுப்பதை நிறுத்தாமல்  ஓட ஆரம்பிக்கிறார். உடனே வீரர் தன் துப்பாக்கியால் ஒருமுறை சுடுகிறார். இது உயிர்பயம்  குறித்தது அல்ல, ஆனால் தேசிய பாதுகாப்புக்கான கடுமையான எச்சரிக்கையாக இருந்தது.

அந்த வீடியோவுக்கு சமூக வலைதளங்களில் பல்வேறு பாராட்டுக்கள் கிடைத்துள்ளன. “பிஎஸ்எஃப் வீரரின் தைரியம் பாராட்டத்தக்கது” என்று ஒருவர் பதிவிட்டுள்ளார். “எச்சரிக்கையை மீறினால், முடிவும் கடுமையானதாகவே இருக்கும்” என்று மற்றொருவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், அந்த வீடியோ எப்போது, எங்கு பதிவுசெய்யப்பட்டது என்பது அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை. ஆனால், இது திரிபுரா மாநில எல்லைப் பகுதியில் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம், நமது எல்லைகளில் கடமை செய்து கொண்டிருக்கும் பிஎஸ்எஃப் வீரர்களின் விழிப்பும், உறுதியும், நாட்டுப்பற்றும் பளிச்சென்று தெரியும் விதமாக உள்ளது. “ஜெய் ஹிந்த்” என்று பலரும் கமெண்டுகளில் பதிவு செய்துள்ளனர்.