
லக்னோவில் உள்ள கேஜிஎம்யூ ட்ராமா மையத்தில் சிக்கலான அறுவை சிகிச்சை மூலம் 7 வயது சிறுமியின் உயிரை மருத்துவர்கள் காப்பாற்றிய அதிசயமான சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விளையாடிக் கொண்டிருந்த போது, 8 செ.மீ நீளமுள்ள ஒரு ஆணி, அந்த சிறுமியின் கழுத்து வழியாக தலையில் ஊடுருவி, மூளையை நேரடியாக தாக்கிய நிலையில் இருந்தது.
இந்த பயங்கர சூழ்நிலையைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர், சிறுமியை முதலில் அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் மாவட்ட மருத்துவமனை, அதிலிருந்து அதிர்ச்சி மையத்திற்கு பரிந்துரை செய்யப்பட்டு, மே 16ஆம் தேதி அதிகாலை 1 மணி அளவில் கேஜிஎம்யூ ட்ராமா சென்டருக்கு அழைத்து வரப்பட்டது. சிறுமியின் நிலையை மதிப்பீடு செய்த மருத்துவர்கள் உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய முடிவெடுத்தனர்.
டாக்டர் சமீர் மிஸ்ரா மற்றும் டாக்டர் வைபவ் ஜெய்ஸ்வால் தலைமையில் நடந்த நான்கு மணி நேர அறுவை சிகிச்சையில், ஆணி வெற்றிகரமாக அகற்றப்பட்டது. அறுவை சிகிச்சைக்குப் பிறகு, சிறுமி 10 நாட்கள் வென்டிலேட்டர் ஆதரவில் வைத்துப் பார்வையிடப்பட்டார். இறுதியில், வியாழக்கிழமை பொதுவார்டுக்கு மாற்றப்பட்ட சிறுமி தற்போது முழுமையாக நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த அறுவை சிகிச்சை குழுவில் டாக்டர் யாதவேந்திரா, டாக்டர் லோகேஷ், டாக்டர் அகன்ஷா, டாக்டர் விஷால், டாக்டர் ரஞ்சித் சந்திரா, டாக்டர் அர்பிதா மற்றும் டாக்டர் அர்ச்சனா ஆகியோர் பங்கேற்றனர்.