தமிழ் சினிமாவில் பிரபலமான தயாரிப்பாளராக இருப்பவர் ஆர்.பி சவுத்ரி. இவருடைய மகன் என்ற அடையாளத்தோடு சினிமாவில் அறிமுகமானவர் ஜித்தன் ரமேஷ். இவருடைய தம்பி பிரபல நடிகர் ஜீவா. இந்நிலையில் ஜித்தன் ரமேஷ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது சண்டை நடக்கும் இடத்தில் அமைதியாக போவது சில நேரங்களில் கண்டுகொள்ளாமல் இருப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டதால் நெட்டிசன்கள் அவரை பலவிதமாக ட்ரோல் செய்தனர். அதன்பிறகு சில நாட்களில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ஜித்தன் ரமேஷ் வெளியேற்றபட்டார். இந்நிலையில் சமீபத்திய பேட்டியில் ஜித்தன் ரமேஷ் தான் பிக் பாஸ் வீட்டுக்குள் அமைதியாக இருந்ததற்கான காரணம் குறித்து பேசியுள்ளார்.

அதாவது அவருடைய அப்பா பிரபலமான தயாரிப்பாளர். அவருடைய தம்பி ஒரு முன்னணி நடிகர். ஒருவேளை பிக் பாஸ் வீட்டுக்குள் ஏதாவது சண்டை போட்டாலோ பிரச்சனை செய்தாலோ அவருடைய மொத்த குடும்பத்தின் இமேஜையும் அது பாதித்துவிடும். தான் இப்படிப்பட்ட ஒரு குடும்ப பின்புலத்திலிருந்து வந்ததால் தான் பிக் பாஸ் வீட்டுக்குள் அமைதியாக இருந்ததாக கூறியுள்ளார். மேலும் என்னுடைய குடும்பம் இப்படி எல்லாம் இருந்தால் நான் பிக் பாஸ் வீட்டுக்குள் வேறு மாதிரி ஆடி இருப்பேன் என்றும் தெரிவித்துள்ளார்.