பீகாரில் கைமூர் என்ற மாவட்டத்தில் ஜோடி ஒருவருக்கு பெற்றோர்கள் திருமணம் செய்து வைத்தனர். இதற்கிடையில் திருமணத்திற்கு முன்பு குங்குமம் வைக்கும் சடங்கு நடைபெற்றது. அப்போது இருதரப்பிலும் இருந்து உறவினர்கள், நண்பர்கள் வந்திருந்தனர். இந்த சடங்கின்போது மணமகன் பெண்ணின் நெற்றியில் குங்குமம் வைக்க சென்றார். அப்போது அவரது கை நடுங்கி உள்ளது.

இதனை பார்த்த பெண் மணமகனுக்கு உடலில் ஏதோ நோய் இருக்கிறது என்று கூறி கல்யாணம் வேண்டாம் என்று கூறியுள்ளார். இதையடுத்து இரு தரப்பினரும் மணப்பெண்ணிடம் பேசியும் பயனளிக்கவில்லை. இதையடுத்து இந்த விஷயம் உள்ளூர் காவல்துறையினர் வரை அழைத்துச் செல்லப்பட்டது. அவர்கள் எடுத்துக் கூறியும் மணப்பெண் கேட்கவில்லை. மணப்பெண் உறுதியாக இருந்ததால் இறுதியில் திருமணம் நிறுத்தப்பட்டது. இச்சம்பவம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.