சென்னை மதுரவாயிலில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜீவா (19) என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் ஜீவா நீண்ட நாட்களாக தனது தந்தையிடம் பைக் வாங்கி தரும்படி கேட்டுள்ளார். ஆனால் அதற்கு முருகன் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் முருகன் வேலை பார்க்கும் இடத்திற்கு சென்ற ஜீவா உடலில் பெட்ரோல் ஊற்றி தனது தந்தையை மிரட்டி உள்ளார்.

ஆனால் எதிர்பாராத விதமாக அவர் மீது தீப்பிடித்தது. இதையடுத்து அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டது. இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி பலியானார். இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.