தென்காசி மாவட்டத்தில் பழைய குற்றாலம் பகுதி உள்ளது. இது சுற்றுலாத்தலமாக இருக்கும் நிலையில் ஏராளமான மக்கள் வந்து செல்கிறார்கள். இந்நிலையில் கொல்லம் என்ற ஊரை பூர்வீகமாக கொண்ட அப்துல் சமது தனது மகன் ஆதிலுடன் அங்கு சென்றுள்ளார். அவர் தனது ஆடிக்காரில் குற்றாலத்தை சுற்றி பார்ப்பதற்காக சென்ற நிலையில் பழைய குற்றாலம் அருகே ஆயிரப்பேரி சாலையில் சென்று கொண்டிருந்த போது திடீரென அவரது கார் தீ பிடித்து எரிந்தது.

இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள் உடனடியாக காரில் இருந்து இறங்கினர். பின்னர் இது தொடர்பாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்தனர்.மேலும்  இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.