
உத்திரபிரதேச மாநிலத்திலுள்ள ஹாபூரில் 18 வயது இளம் பெண் சித்தாரா இவர் பக்கத்து வீட்டுக்காரருடன் ஏற்பட்ட மோதலில் தலையில் பலத்த காயம் அடைந்தார். உடனடியாக இவரை அருகிலுள்ள சுகாதார மையத்திற்கு கூட்டி சென்றனர். அப்போது சுகாதார மையம் மருத்துவர் இவருக்கு தலையில் தையல் போட வேண்டும் எனக் கூறியுள்ளார். மருத்துவரும், செவிலியரும் இணைந்து அப்பெண்ணிற்கு தலையில் தையல் போட்டு கட்டி வீட்டிற்கு அனுப்பி விட்டனர். இந்நிலையில் வீட்டிற்கு சென்ற பெண் தலைவலி தாங்க முடியாமல் கதறி அழுதுள்ளார்.இதனால் அவருடைய பெற்றோர் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
அங்கு தலையில் உள்ள தையலை பிரித்துப் பார்த்த மருத்துவர்கள் தலையில் ஊசி இருப்பதைக் கண்டு அதிர்ச்சடைந்தனர். தலையில் உள்ள ஊசியை எடுத்து கட்டு போட்டு விட்டனர். இதுகுறித்து அப்பெண்ணின் பெற்றோர் சுகாதார மைய மருத்துவர் குடிபோதையில் மருத்துவம் பார்த்துள்ளார் என அவர் மீது புகார் அளித்துள்ளனர். எங்கள் பெண்ணிற்கு நியாயம் கிடைக்க வேண்டும் எனக் கூறினர். இதனை அடுத்து ஹாபூர் மாவட்ட தலைமை மருத்துவர் இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியுள்ளார். இச்செய்தி குறித்து முதன்மை மருத்துவ அதிகாரிகள் ஹாபூரில் உள்ள மருத்துவர்கள் ஒருபோதும் பணியில் மது அருந்துவதில்லை என விளக்கம் அளித்துள்ளனர்.