2004 ஆம் ஆண்டு அயன் கியூரியஸ் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் ஜோசப். மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழி படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றி வந்த ஜோசப் “நான்சி ராணி” என்ற படத்தை இயக்கி வந்தார். இது இவர் இயக்குனராக இயக்கம் முதல் படமாகும்.

இந்நிலையில் ஹெப்டடைஸ் நோய்க்காக சிகிச்சை பெற்று வந்த ஜோசப் பிப்ரவரி 24ஆம் தேதி தனது 31-வது வயதில் காலமானார். நான்சி ராணி திரைப்படம் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் ஜோசப்பின் இறப்பு மலையாள திரை உலகில் சோகத்தில் அழுத்தியுள்ளது. படத்தில் நடித்தவர்கள் தங்கள் இரங்கல்களை பதிவிட்டுள்ளனர்.