காங்கிரஸ் கட்சியின் எம்.பி ஆன சசி தரூர் சமீபத்தில் ஊடகம் ஒன்றில் பிரதமர் நரேந்திர மோடியை குறித்து பாராட்டி பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து மல்லிகார்ஜுன் கார்கேயிடம் செய்தியாளர்கள் சந்திப்பில் கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த கார்க்கே கூறியதாவது, “அவரது மொழி மிகவும் நன்றாக உள்ளது.

அதான் அவர் காங்கிரஸில் தக்க வைக்கப்பட்டுள்ளார். ஆப்ரேஷன் சிந்துரில் நாங்கள் அனைவரும் ஒன்றாக நின்றோம். அதற்கு மிக முக்கிய காரணம் எங்களுக்கு நாடு பெரியது.

எனவே நாங்கள் முதலில் நாட்டை விரும்புகிறோம். ஆனால் சிலருக்கு மோடி பெரியவர் நாடு அதற்குப் பின்னர் உள்ளது. அதற்காக நாம் என்ன செய்ய முடியும்?” என விமர்சித்தார்.

இதனை அடுத்து கார்கேவின் கருத்துக்கு பதில் அளிக்கும் விதமாக சசி தரூர் தனது இணையதள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில்,”பறக்க யாருடைய அனுமதியும் தேவையில்லை.

இறக்கைகள் உங்களுடையது. வானம் யாருக்கும் சொந்தமில்லை”எனக் குறிப்பிட்டு ஒரு பறவையின் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். மேலும் சசி தரூர் பிரதமரை தொடர்ந்து புகழ்ந்து வருவது, பாஜகவுக்கு தாவுவதற்கான அறிகுறி என பல ஊகங்கள் அரசியல் வட்டாரத்தில் இருந்தன. ஆனால் அனைத்தையும் சசி தரூர் நிராகரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.