
பீகார் மாநிலத்தில் உள்ள பிஹியா-பிஹ்தா மாநில நெடுஞ்சாலையில் அமைந்துள்ள சிகார்த்தா காவல் நிலையப் பகுதியில் உள்ள சிக்ரால் பெட்ரோல் பம்ப் அருகே நடந்த பயங்கர சாலை விபத்தில், திருமணம் முடிந்து மாமியார் வீட்டிற்கு சென்ற 21 வயதான புதுமணப் பெண் லலிதா தேவி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அந்த விபத்தில் மணமகன் மோனு குமார் உட்பட 7 பேர் காயமடைந்தனர், இதில் மோனு குமாரின் நிலை மோசமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
அந்த விபத்து குறித்த தகவலின்படி, லலிதா தேவி, ரஞ்ச்மால்தி கிராமத்தைச் சேர்ந்த மோனுவின் திருமணம் பதாரி சிங்கில் உள்ள பெண் வீட்டில் மிகுந்த ஆடம்பரத்துடன் நடைபெற்றது. திருமணத்திற்குப் பிறகு, கடந்த வியாழக்கிழமை காலை பிரியாவிடை நிகழ்ச்சி முடிந்ததும், மணமகன் மற்றும் மணமகள் ஆகியோர் குடும்பத்தினருடன் காரில் மாமியார் வீட்டிற்குப் புறப்பட்டனர்.
அப்போது சிக்ரால் பெட்ரோல் பம்ப் அருகே, எதிரே வந்த ஒரு லாரி நேருக்கு நேர் மோதியதில், கார் விபத்துக்குள்ளாகியது. இதில் மணமகன் மற்றும் மற்ற பயணிகள் படுகாயமடைந்தனர். அனைவரும் அருகிலுள்ள அராவில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால், விபத்தில் சிக்கிய மணமகள் லலிதா தேவி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மணமகனும் தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் போராடி வருகிறார். இந்த சம்பவம் இரு குடும்பங்களின் மகிழ்ச்சியான நேரத்தை துக்கமாக மாற்றி உள்ளது. புதிய வாழ்க்கையை தொடங்கிக் கொண்டிருந்த லலிதாவின் இறப்பு, அவரின் மாமியார் வீட்டிலும், பெற்றோர் வீட்டிலும் கண்கலங்க வைத்துள்ளது.
லலிதா தேவி, துத்நாத் சிங்கின் மூத்த மகளாகவும், அவருடைய தந்தை 10 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. அவரது குடும்பத்தில் தாய் இதராஜோ தேவி, சகோதரர்கள் தன்ஜி சிங், நந்த்ஜி சிங் மற்றும் சகோதரி சவிதா தேவி ஆகியோர் உள்ளனர். மணமகளின் இறுதி சடங்குகளை அவரது மாமனார் நடத்தினார், இசசம்பவத்தால் முற்றிலும் மகிழ்ச்சியில் இருந்த திருமணவிழா துயரமான நிகழ்வாக மாறியது.