கர்நாடக மாநிலத்தில் உள்ள லிங்கச்சூர் என்ற பகுதியில் வம்சி கிருஷ்ணா என்பவர் வசித்து வருகிறார். இவர் தன்னுடைய மனைவி மற்றும் 7 வயது மகனுடன் ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்றுள்ளார். அங்கு சிறுவன் விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென கீழே விழுந்து தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் சிறுவனின் பெற்றோர் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்குள்ள மருத்துவர் சிறுவனுக்கு தலையில் ஏற்பட்ட காயத்திற்கு தையல் போடுவதற்கு பதில் உடைந்த பொருட்களை ஒட்டுவதற்கு பயன்படுத்தப்படும் பெவிகுவிக் பயன்படுத்தி காயம் ஏற்பட்ட இடத்தில் ஒட்டியுள்ளார்.

இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மருத்துவமனை நிர்வாகத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் மருத்துவமனை நிர்வாகம் அலட்சியமாக பதில் அளித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்த சுகாதாரத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் அவர்கள் தனியார் மருத்துவமனையை பூட்டி சீல் வைத்தனர். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.