மலையாள திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து பிரபலமடைந்தவர் தான் அஞ்சலி நாயர். இவர் தமிழ் சினிமாவில் ரஜினியின் அண்ணாத்த, விஜய் சேதுபதியின் மாமனிதன் உள்ளிட்ட சில படங்களில் நடித்து உள்ளார். சென்ற 2011 ஆம் வருடம் அனீஷ் என்ற டைரக்டரை திருமணம் செய்து விவாகரத்து பெற்றார் அஞ்சலி நாயர்.

இதையடுத்து அஞ்சலி நாயர் கடந்த வருடம் அஜித் என்ற உதவி இயக்குனரை திருமணம் செய்து கொண்டார். திருமணமான 5 மாதத்தில் இத்தம்பதியினருக்கு குழந்தையும் பிறந்தது. இந்த நிலையில் ஒரு பேட்டியில் அஞ்சலி நாயர் கூறியதாவது, “தமிழ் திரைப்படத்தில் நடித்தபோது வில்லன் நடிகர் ஒருவர் என்னிடம் தவறாக நடக்க முயன்றார் எனும் தகவலை பகிர்ந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

அதாவது, அவர் வில்லன் மட்டுமின்றி இணை தயாரிப்பாளராகவும் இருந்தார். என்னிடம் புரபோஸ் செய்ததோடு, நான் எங்கு போனாலும் பின்தொடர்ந்து வந்தார். ஒரு முறை ரயிலில் இருந்து தள்ளிவிட்டு கொல்ல முயற்சித்தார். இவ்வாறு அவர் தொடர்ச்சியாக டார்ச்சர் செய்து வந்ததால் காவல்துறையினர் உதவியை நாடினேன். அதனை தொடர்ந்து கேரளாவுக்கே சென்று விட்டேன்” என தெரிவித்துள்ளார்.