கேரளா தலைநகர் திருவனந்தபுரம் மாவட்டத்தில் விழிஞ்சம் பகுதி அருகில் சவுரா-அடிமலதுரா பகுதியருகே தனியார் தங்கும் விடுதி ஒன்று இருக்கிறது. இந்த விடுதியில் இங்கிலாந்திலிருந்து  சுற்றுலாவிற்காக வந்திருந்த பெண் ஒருவர் தங்கியுள்ளார். இதையடுத்து அவர் நள்ளிரவில் சவுரா பீச்சுக்கு சுற்றிப்பார்ப்பதற்காக தனியாக சென்றுள்ளார். இந்நிலையில் 5 பேர் கொண்ட கும்பல் அவரை அணுகி சில்மிஷத்தில் ஈடுபட்டு தொல்லை செய்துள்ளனர். மேலும் தனியாக வந்த பெண்ணை  பலாத்காரம் செய்ய முயன்றுள்ளது அந்த கும்பல்.

அப்போது சுற்றுலா பயணி தங்கியிருந்த விடுதியின் சமையல் கலைஞர் ஒருவர் ஓடி சென்று அந்த கும்பலின் பலாத்கார முயற்சியை தடுத்துள்ளார். இதன் காரணமாக சமையல் கலைஞர் மீது அந்த கும்பல் தாக்குதல் நடத்தி உள்ளனர். இதற்கிடையில் அந்த கும்பலில் ஒருவர் உள்ளூரை சேர்ந்த வாடகை வாகன ஓட்டுநர் ஆவார். அவர்கள் நினைத்தது நடக்காததால் அந்த வெளிநாட்டு பெண்ணை தகாத வார்த்தைகளால் திட்டி இருக்கின்றனர். இந்த சம்பவத்தில் 5 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.