
அமெரிக்காவின் மின்னசோட்டா சட்டசபை உறுப்பினர்கள் வீட்டில் தாக்குதல் நடத்தப்பட்டது. காவல்துறையினர் போல வேடமடைந்து வந்த மர்ம நபர் துப்பாக்கி சூடு நடத்தினார். இதில் ஜனநாயக கட்சியைச் சேர்ந்த சட்டசபை உறுப்பினர் மெலிசா ஹார்ட்மேன் மற்றும் அவரது கணவர் கொலை செய்யப்பட்டனர்.
மற்றொரு சட்டசபை உறுப்பினர் ஜான் ஹாப்மேன் படுகாயம் அடைந்தார். இந்நிலையில் அவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக கவர்னர் டிம். லால்ஸ் கூறியதாவது மின்னசோட்டாவில் நடந்த அரசியல் வன்முறைகளுக்கு எதிராக நிற்க வேண்டும். தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
இதுகுறித்து அமெரிக்க புலனாய்வு அமைப்பான எப்பிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். சட்டசபை உறுப்பினர்கள் மீது தாக்குதல் நடத்திய நபரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கண்டனம் தெரிவித்துள்ளார். இது போன்ற கொடூரமான வன்முறையை பொறுத்துக் கொள்ள முடியாது என்று கூறியுள்ளார்.