திருநெல்வேலி மாவட்டம் சாந்தி நகர் பகுதியில் பாக்யராஜ் என்பவர் ரசித்து வருகிறார். இவர் ஓய்வு பெற்ற சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ஆவார். இவருக்கும், இவருடைய மருமகன் காசிமுத்து என்ற நபருக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்பாக குடும்ப பிரச்சினை தொடர்பாக தகராறு நடந்துள்ளது.

இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் மாலை நேரத்தில் காசிமுத்து, சாந்தி நகரில் உள்ள பாக்கியராஜின் வீட்டிற்கு சென்ற நிலையில் திடீரென அவரது வீட்டிற்கு தீ வைத்து விட்டு அங்கிருந்து சென்றுவிட்டார். இதனால் பதட்டமடைந்த பாக்கியராஜ் உடனடியாக பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

அந்த புகாரின் படி வழக்கு பதிவு செய்த துறையினர் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.