சிறுத்தை, வீரம், விஸ்வாசம், அண்ணாத்த ஆகிய பல்வேறு திரைப்படங்களை இயக்கிய சிவா டைரக்டு செய்யும் படத்தில் சூர்யா தற்போது நடித்து வருகிறார். “சூர்யா-42” என தற்காலிகமாக பெயரிடப்பட்டிருக்கும் இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றனர்.

இத்திரைப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா பத்தானி, யோகிபாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உட்பட பலர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கவுள்ள இத்திரைப்படம் 3டி முறையில் சரித்திர திரைப்படமாக 10 மொழிகளில் வெளியாக இருக்கிறது.

இப்படத்தில் “சீதாராமம்” திரைப்படத்தில் நடித்த நடிகை மிருணாள் தாகூர் குறிப்பிட்ட காட்சிகளில் நடிக்க இருப்பதாகவும் படத்திற்கு “வீர்” என தலைப்பு வைக்க திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் பரவி வந்தது. இந்நிலையில் தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் “சூர்யா-42” திரைப்படத்தின் டைட்டில் குறித்த அறிவிப்பானது விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இப்பதிவு தற்போது வைரலாக பரவி வருகிறது.