தமிழக முதல்வர் ஸ்டாலின் சிவகங்கை மாவட்டத்தில் அண்மையில் கீழடி அருங்காட்சியகத்தை திறந்து வைத்தார். இந்த அருங்காட்சியகத்தில் தமிழர்களின் நாகரிகத்தை விளக்கும் பல்வேறு பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மாணவர்களும் பொதுமக்களும் ஆர்வத்துடன் வந்து கீழடி அருங்காட்சியகத்தை பார்வையிடுகிறார்கள். இதேபோன்று திரை உலக பிரபலங்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் என பலரும் கீழடி அருங்காட்சியகத்தை வந்து பார்வையிடுகிறார்கள்.

அந்த வகையில் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சூர்யா மற்றும் நடிகை ஜோதிகா ஆகியோர் இன்று கீழடி அருங்காட்சியகத்தை பார்வையிட்டுள்ளனர். இவர்களுடன் சூர்யாவின் தந்தை சிவகுமார் மற்றும் அவர்களுடைய உறவினர்கள் என பலரும் கீழடி அருங்காட்சியகத்துக்கு வந்துள்ளனர். இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.