இயக்குனர் சுந்தர். சி இயக்கத்தில் கடந்த 2014-ஆம் ஆண்டு சுந்தர் சி, ஆண்ட்ரியா, ஹன்சிகா ஆகியோர் நடிப்பில் வெளியான அரண்மனை படம் நல்ல வரவேற்பை பெற்று வசூல் ரீதியாகவும்  வெற்றி பெற்றது. இதன் பிறகு இப்படத்தின் இரண்டாம் மற்றும் மூன்றாம் பாகங்களையும் இயக்கியதை தொடர்ந்து, இந்த படத்தின் 4-ஆம் பாகத்தையும் உருவாக்க உள்ளார்.

இந்த படத்தின் கதாநாயகனாக நடிக்க முதலில் விஜய் சேதுபதி மற்றும் சந்தானம் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்ட நிலையில், ஒரு சில காரணத்தினால் விஜய் சேதுபதி இப்படத்தை விட்டு வெளியேறினார். இதனால் தற்போது சுந்தர். சி இந்த படத்தில் கதாநாயகனாகவும், கதாநாயகியாக  இருவர் நடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி நடிகைகள் தமன்னா மற்றும் ராஷி கண்ணா இருவரிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவும், லைக்கா புரொடெக்ஷன்ஸ் தயாரிப்பில்  விரைவில் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாம் கூறப்படுகிறது.