
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள பகுதியில் பவண் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 23ம் தேதி அஜ்மீர் நெடுஞ்சாலையில் உள்ள ஒரு ஹோட்டலில் வாடகைக்கு அறை எடுத்து தங்கியுள்ளார். இந்நிலையில் அவர், அந்த அறையில் இருந்தவாறு பேஸ்புக் லைவ் வீடியோவில் பேசியுள்ளார். அப்போது அவர் சிறிது நேரத்தில் தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக கூறியுள்ளார். இந்த லைவ் வீடியோவை பார்த்துக் கொண்டிருந்த அவரது நண்பர், இதுகுறித்து காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து பவண் இருக்கும் இடத்தை கண்டறிந்த காவல்துறையினர், அவர் தங்கி இருந்த ஹோட்டலுக்கு சென்றனர். அங்கு பவண், தான் தற்கொலை செய்து கொள்வதற்கு தயாராகிக் கொண்டிருந்தார். இதனை தடுத்து நிறுத்திய காவல்துறையினர், அங்கிருந்த அழைத்துச் சென்று ஆலோசனை வழங்குவதற்காக ஏற்பாடு செய்தனர். சரியான நேரத்தில் பவணின் நண்பன் தகவல் கொடுத்ததால் அவரது உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது.