புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள தென்னிலை பட்டி கிராமத்தில் கூலி வேலை பார்க்கும் சுப்பிரமணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் 3 பெண் குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் சரியாக வேலைக்கு செல்லாமல் சுப்பிரமணி வீட்டிலிருந்ததால் மனைவியுடன் தகராறு ஏற்பட்டது. இதனால் மன உளைச்சலில் சுப்பிரமணி விஷ மருந்தை குடித்து மயங்கி விழுந்தார்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் குடும்பத்தினர் சுப்பிரமணியை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் சுப்பிரமணி ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.