மகாராஷ்டிரா மாநிலம் பூனேவின் பிம்ப்பி சின்ச்வாத் பகுதியில் மரம் ஒன்று இருந்துள்ளது. அந்த மரத்தின் தண்டில் இருந்து திடீரென நீர் கசிய தொடங்கியது. இதையடுத்து அங்குள்ள பொதுமக்கள் அந்த மரத்திற்கு மஞ்சள், குங்குமம் பூசி மரத்தை கடவுளாக நினைத்து வழிபட தொடங்கினர்.

அதன் பின், மரத்திலிருந்து கசியும் நீர் நோய்களை தீர்க்கும் என்று கூறி அதனை எடுத்துச் சென்றனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த மாநகராட்சி அதிகாரிகள் சோதனை செய்தனர். அந்த சோதனையில் தண்ணீர் குழாயில் ஏற்பட்ட கசிவால் மரத்தில் தண்ணீர் வந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.