
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் குஷ்பூ. இவர் பாஜக கட்சியின் முக்கிய பிரமுகராகவும் இருக்கிறார். இந்நிலையில் நடிகை குஷ்பு வீட்டில் தற்போது திடீரென ஒரு மரணம் நேர்ந்துள்ளது. இது குறித்து நடிகை குஷ்பூ ட்விட்டரில் உருக்கமாக பதிவிட்டுள்ளார். அதாவது நடிகை குஷ்பு வீட்டில் 12 வருடங்களாக வளர்த்த அவருடைய செல்லப் பிராணி நாய் தற்போது இறந்து விட்டதாம்.
இது குறித்து நடிகை குஷ்பூ வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ஒரு கூச்ச சுபாவம் உள்ள நாயாக எங்களிடத்தில் வளர்ந்த நீ எங்கள் இதயத்தில் இடம் பிடித்தாய். உன்னுடைய செயல்களால் மனம் கவர்ந்த நாங்கள் உன் இறப்பினால் மனம் உடைந்து இருக்கிறோம். நீ நிம்மதியாய் இருப்பாய் என நம்புகிறோம். மிஸ் யூ ஸ்நூபி. உன்னைப் போன்று யாரும் இருக்க முடியாது. ஐ லவ் யூ பட்டு. கடவுளே தயவுசெய்து அவனை பார்த்துக்கொள் என்று பதிவிட்டுள்ளார். மேலும் நடிகை குஷ்புவின் பதிவை பார்த்த ரசிகர்கள் பலரும் அவருக்கு ஆறுதல் தெரிவித்து வருகிறார்கள்.
You were part of us for almost 12 long years. You came in as a shy little kid but became our heartthrob. Your understanding, unconditional love, your smile, tantrums at times, protective nature and the most obedient nature was heart melting. You have left us heartbroken. Hope you… pic.twitter.com/DJXUWEQL15
— KhushbuSundar (Modi ka Parivaar) (@khushsundar) April 27, 2023