டெல்லி கல்லூரியில் அசைவ உணவுக்கு தடை விதிக்கபட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் போராட்டம் நடத்தினர். டெல்லி பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் கல்லூரியில் எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் அசைவ உணவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

கல்லூரி நிர்வாகத்தின் இந்த உத்தரவால் விடுதி உணவகம் மற்றும் கேன்டீனில் உணவுகள் பரிமாறுவது நிறுத்தப்பட்டது. அசைவ உணவுக்கான தடையை நீக்க வலியுறுத்தி பலமுறை மாணவர்கள் அமைப்பு போராட்டம் நடத்தியதாக தெரிகின்றது. இருப்பினும் தடை நீக்கப்படாததால் அதிதிருப்தி அடைந்த மாணவர்கள் அசைவ உணவுக்கு தடை விதிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர்.