
பிரேசில் நாட்டில் உள்ள ரியோ கிராண்ட் டு சுல் என்ற மாகாணம் உள்ளது. இந்த மாகாணத்தில் இருந்து நேற்று சிறிய விமானம் ஒன்று புறப்பட்டது. இந்த விமானம் சாலொ பாலோ மாகாணத்தை நோக்கி சென்றது. அதில் மொத்தம் 10 பேர் பயணம் செய்தனர். இந்நிலையில் இந்த விமானம் கிராமடோ நகர் அருகே சென்று கொண்டிருந்தப்போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்து, வீட்டின் மீது மோதியது.
இதில் விமானம் தீப்பற்றி எரிந்தது. இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த மொத்தம் 10 பேரும் உயிரிழந்தனர். அதோடு வீட்டில் இருந்த 2 பேரும் படுகாயமடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த மீட்பு குழுவினர் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.