மத்திய அரசு மும்மொழிக் கொள்கையை பெரும்பாலான மாநிலங்கள் ஏற்க மறுத்து வருகின்றன. மேலும் அதற்கு எதிராக மத்திய அரசு மீது தொடர்ந்து குற்றச்சாட்டுகளை வைத்து வருகின்றனர். ஆனால் மகாராஷ்டிரா மாநிலத்தில் மும்மொழிக் கொள்கை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

அதன்படி பட்னாவிஸ் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி மராத்தி மற்றும் ஆங்கில வழி பள்ளி கல்வி நிலையங்களில் 1ஆம் வகுப்பு முதல் இந்தி கற்று கொடுக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியது.

ஆனால் அதற்கு அம்மாநிலத் துணை முதல்வர் அஜித் பவார் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அஜித் பவார் கூறியதாவது, இதுகுறித்து நேற்று நடைபெற்ற முதலமைச்சர் ஆலோசனை கூட்டத்தில் பேசப்பட்டது.

அதாவது 1ஆம் வகுப்பு முதல் 4ஆம் வகுப்பு வரை இந்தி கற்பிக்கக் கூடாது. 1ஆம் வகுப்பு மாணவர்கள் மராத்தி கற்க வேண்டும் அவற்றை முதலில் சரளமாக எழுத, பேச வேண்டும்.

அதற்கான திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும். அதன்பின்பு தான் 5ஆம் வகுப்பில் இருந்து இந்தி பாடத்திட்டத்தினை தொடங்க வேண்டும் என கூறியுள்ளார்.