SSC தேர்வை தமிழில் எழுத மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் அனுமதி அளித்துள்ளது. மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் ஆண்டுதோறும் மத்திய அரசின் துறைகளுக்கு தகுதி வாய்ந்த பணியாளர்களை போட்டி தேர்வுகளை நடத்தி பணியமர்த்தி வருகின்றது. இந்தத் தேர்வு ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் மட்டும் நடத்தப்பட்டு வந்தது.
இந்த நிலையில் காலியாக உள்ள 11 ஆயிரத்து 409 காலிப்பணியிடங்களுக்கான தேர்வை தமிழ் உள்பட 13 மாநில மொழிகளில் எழுத மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் அனுமதி அளித்துள்ளது. அந்த வகையில் தமிழ், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட 13 மாநில மொழிகளில் இந்த தேர்வு நடத்தப்பட உள்ளது. தகுதி உள்ளவர்கள் பிப்ரவரி 17ஆம் தேதிக்குள் www.ssc.nic.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.