தமிழகத்தில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு மார்ச் 28ஆம் தேதி முதல் ஏப்ரல் 15ஆம் தேதி வரை நடைபெற்றது. அதன் பின் தேர்வு முடிவுகள் கடந்த மே 16ஆம் தேதி வெளியானது. இதேபோன்று அன்றே 11-ம் வகுப்பு தேர்வு முடிவுகளும் வெளியானது. இதற்கு முன்னதாக அதாவது கடந்த மே-8 ம் தேதி 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.

இந்நிலையில் 10 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பொது தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற முகாம் வாழ் இலங்கை தமிழர்கள் குடும்பத்தைச் சேர்ந்த 9 மாணவர்களை முதலமைச்சர் மு க ஸ்டாலின் பாராட்டினார். மேலும் அவர்களுக்கு தலா ரூ.50000 பரிசு தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ்களை முதலமைச்சர் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.