சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) இன்று இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் ஐ.சி.சி உறுப்புரிமையை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்தியுள்ளது. ஐசிசி வாரியம் இன்று கூடி, இலங்கை கிரிக்கெட் தனது உறுப்பினர் என்ற வகையில் தனது கடமைகளை மீறுவதாகக் கண்டறிந்தது. குறிப்பாக இலங்கையில் கிரிக்கெட் அதன் விவகாரங்களை தன்னாட்சி முறையில் நிர்வகிக்கவில்லை மற்றும் அதன் நிர்வாகத்தில் அதன் அரசாங்கம் தலையிடுவதை ஐ.சி.சி கவனித்தது. இடைநீக்கம் குறித்த விதிமுறைகளை ஐசிசி வாரியம் உரிய நேரத்தில் முடிவு செய்யும். இந்த முடிவு காரணமாக அவர் இனி எந்த ஐசிசி போட்டியிலும் விளையாட முடியாது. இலங்கை கிரிக்கெட் வாரிய நிர்வாகத்தில் அரசியல் தலையீடு இல்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் ஐசிசி தெரிவித்துள்ளது..

இந்தியாவில் நடைபெற்று வரும் 2023 ஒருநாள் உலகக் கோப்பையில் இலங்கையால் சிறப்பாக எதையும் செய்ய முடியவில்லை. 9 போட்டிகளில் 2ல் மட்டுமே வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் 9வது இடத்தை பிடித்தது. அதனால், 2025ல் பாகிஸ்தானில் நடக்கவுள்ள சாம்பியன்ஸ் டிராபிக்கு தகுதி பெற முடியவில்லை. இந்தியாவில் மோசமான தோல்விக்கு பின், இலங்கை கிரிக்கெட் வாரியம் கலைக்கப்பட்டுள்ளது. இலங்கையின் விளையாட்டு அமைச்சினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனுடன், இலங்கையில் கிரிக்கெட்டை சுமூகமாக நடத்துவதற்கு இடைக்கால கிரிக்கெட் குழுவையும் விளையாட்டு அமைச்சகம் அமைத்துள்ளது. இந்த குழுவின் பொறுப்பு இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் அர்ஜூன் ரணதுங்காவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது..