
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இதேபோன்று ரோகித் சர்மாவும் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். இவர்கள் இருவருமே சர்வதேச கிரிக்கெட் தொடரில் முன்னணி வீரர்கள் என்பதால் அவர்களுக்கு ஏ+ கிரேட் சார்பாக ரூபாய் 7 கோடி சம்பளம் வழங்க நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
ஆனால் இருவருமே ஓய்வை அறிவித்ததால் அவர்களின் ஒப்பந்தத்தை மறுப்பரிசீலனை செய்வதாக பிபிசிஐ அறிவித்துள்ளது. இந்த சூழ்நிலையில் இருவருக்கும் ₹5 கோடி சம்பளம் உள்ள ஏ கிரேட் அல்லது ரூபாய் 3 கோடி சம்பளம் உள்ள பி கிரேடுக்கு மாற்ற வாய்ப்பு உள்ளது என கூறப்படுகிறது.
மேலும் இதுகுறித்து பிசிசிஐயின் செயலாளர் தேவகித் சைகியா கூறியதாவது, இந்திய அணி வீரர்களான விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவருமே போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றாலும், அவர்களது ஏ+ கிரேட் ஒப்பந்தம் தொடரும் எனவும், மேலும் அவர்கள் இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய பகுதியாகவே உள்ளனர்.எனவே, ஏ+ கிரேடுக்கான வசதிகள் அனைத்தையும் பெற தகுதியுடையவர்கள் என தெரிவித்துள்ளார்.