கர்நாடகம் மாநிலத்திலுள்ள சிவமோகாவில் கட்டப்பட்டிருக்கும் புது விமான நிலையத்திற்கு முன்னாள் முதல்வர் பி.எஸ்.எடியூரப்பாவின் பெயர் சூட்ட அம்மாநில அரசானது முடிவு செய்து இருப்பதாகவும், அதற்கான பரிந்துரையை மத்திய அரசுக்கு அனுப்ப உள்ளதாகவும் முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்தார். எடியூரப்பாவின் 80வது பிறந்தநாளை முன்னிட்டு பிப்,.27 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி விமான நிலையத்தை திறந்து வைக்கவுள்ளார். சிவமோகாவில் கடந்த புதன்கிழமை நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் பசவராஜ் பொம்மை, எடியூரப்பாவின் பங்களிப்புகளால் விமான நிலையப் பணிகள் நிறைவேறியதாக கூறினார்.

சென்ற வருடம் சிவமோகா விமானநிலையத்துக்கு எடியூரப்பா பெயரை சூட்டுவதற்கு மாநில அரசு முதல் முதலில் முன்வைத்தபோது, அது பொருத்தமற்றது என்று கூறி அதற்கு பெயர் வைக்க வேண்டாம் என முதல்வர் பொம்மையை எடியூரப்பா வலியுறுத்தினார். அதோடு வேறு ஏதாவது கர்நாடக ஆளுமையின் பெயரை சூட்டுமாறு பரிந்துரைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.