நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகாரை ரத்து செய்ய முடியாது எனக் கூறி சீமான் தொடர்ந்த வழக்கைத் தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகாரை ரத்து செய்ய முடியாது எனக்கூறி சீமான் தொடர்ந்த  வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த 2008 ஆம் ஆண்டு மதுரை கோயிலில் இருவரும் மாலை மாற்றிக்கொண்டனர். பலமுறை கட்டாயப்படுத்தி விஜயலட்சுமியை சீமான் தொடர்பில் வைத்துள்ளார். திருமணம் செய்து கொள்வதாக பொய் வாக்குறுதி கொடுத்ததால், இரண்டு முறை சீமானுக்கு எதிரான புகாரை விஜயலட்சுமி வாபஸ் பெற்றுள்ளார் என்று காவல்துறை தரப்பில் கூறப்பட்டது. அதனால் சர்வ சாதாரணமாக இந்த வழக்கை முடித்து விட முடியாது என்று உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.