டெல்லியில் புதிதாக கட்டப்பட்டுள்ள நாடாளுமன்ற கட்டிடத்தை வருகின்ற 28-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்க இருக்கிறார். இந்த புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழா குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா செய்தியாளர்களை சந்தித்து பேசினார். இது குறித்து அவர் பேசியதாவது, இந்தியா தன்னுடைய 75-வது சுதந்திர வருடத்தை நிறைவு செய்த நிலையில் அதை இன்னும் சிறப்பாகும் விதமாகவே புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறக்கப்பட இருக்கிறது.

இந்த புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் தமிழ்நாட்டில் இருந்து வழங்கப்பட்ட செங்கோல் வைக்கப்படும். தமிழ்நாட்டில் தயார் செய்யப்பட்ட செங்கோலை மவுண்ட் பேட்டன் நேருவிடம் வழங்கியது பற்றி பிரதமர் மோடி கேள்விப்பட்டார். மேலும் அந்த தங்க செங்கோல் சோழர்கள் கால நடைமுறையின் படி புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் வைக்கப்பட இருக்கிறது என்று கூறினார்.